தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
எஸ்பிஐ வங்கிக்கு தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் நன்கொடையாளர்கள், அளித்த தொகை, கட்சிகள் பெற்றுக் கொண்ட தொகை ஆகிய விவரங்கள் கொண்ட தேர்தல் பத்திரங்களை ஒப்படைத்தது. அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அரசமைப்பு சாசன அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி வழங்கவில்லை. அதில் தேர்தல் பத்திர எண், தேர்தல் பத்திரத்தை வாங்கிய நபர், எந்த கட்சிக்கு யார் நிதி வழங்கியுள்ளார், எவ்வளவு பணம் டினாமினேஷன் ஆகியவற்றை திங்கட்கிழமைக்குள் வழங்க வேண்டும். மேலும் பேப்பர் வடிவில் இருக்கும் அனைத்தும் டிஜிட்டலாக வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை இது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.