அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம் வரும் 26ஆம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது .இதில் உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினால் திட்டமிட்டபடி 26 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து துறையின் அரசு ஊழியர்கள் விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தவும், அரசு ஊழியர்கள் எவரேனும் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால் அவர்கள் இல்லாத காலமாக கருதப்படும். மேலும் பணியில் இல்லை என்பது உறுதி செய்யவதோடு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண விடுப்பு மருத்துவ விடுப்பு தவிர வேறு எதற்காகவும் விடுப்பு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊழியர்களின் வருகை நிலையை அறிந்து மனித வள மேலாண்மை துறைக்கு 15ஆம் தேதி காலை 10. 15 மணிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.