ஆங்கிலேயர் காலத்தில் வெளியிட்ட பழங்கால தங்க காசுகள் கண்டெடுப்பு

December 5, 2022

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணம் வெளியிட்ட பழங்கால தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஜங்காரெட்டிகுடம் கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணா, தேஜாஸ்ரீ என்போர், தங்கள் விவசாய நிலத்தில் கடந்த மாதம் 29ம் தேதி கூலித்தொழிலாளர்களை கொண்டு சொட்டு நீர்பாசனத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு இடத்தில் மண் பானை இருப்பதை பார்த்த தொழிலாளர்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் 18 தங்க காசுகள் இருந்துள்ளது. இதனை தாசில்தார் நாகமணியிடம் ஒப்படைத்தார். […]

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை மாகாணம் வெளியிட்ட பழங்கால தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஜங்காரெட்டிகுடம் கிராமத்தை சேர்ந்த சத்தியநாராயணா, தேஜாஸ்ரீ என்போர், தங்கள் விவசாய நிலத்தில் கடந்த மாதம் 29ம் தேதி கூலித்தொழிலாளர்களை கொண்டு சொட்டு நீர்பாசனத்திற்காக குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு இடத்தில் மண் பானை இருப்பதை பார்த்த தொழிலாளர்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். அதில் 18 தங்க காசுகள் இருந்துள்ளது. இதனை தாசில்தார் நாகமணியிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் உதவி இயக்குநர் கூறுகையில், விவசாய நிலத்தில் கிடைத்த நாணயங்கள் கி.பி.1740 முதல் 1805 காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி மூலம் சென்னை மாகாணத்தால் அச்சிடப்பட்ட நாணயங்கள் என தெரியவந்துள்ளது. நாணயங்களில் வெங்கடேஸ்வரா சுவாமி, பத்மாவதி தாயார் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் வரலாற்றை கண்டறிய விரிவான ஆய்வு தேவை
என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu