தமிழகத்தில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி பகுதியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு 40 முதல் 42 சென்டிமீட்டர் நீளம் உடைய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக இருந்த இந்த விலாங்கு மீனை ஆய்வு செய்ததில், இது புதிய வகை விலாங்கு மீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் அமைந்துள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தில் இது ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்திய நீர்நிலைகளில் உள்ள விலாங்கு […]

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி பகுதியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு 40 முதல் 42 சென்டிமீட்டர் நீளம் உடைய விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக இருந்த இந்த விலாங்கு மீனை ஆய்வு செய்ததில், இது புதிய வகை விலாங்கு மீன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் அமைந்துள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தில் இது ஆய்வு செய்யப்பட்டது. அதில் இந்திய நீர்நிலைகளில் உள்ள விலாங்கு மீன் வகைகளைக் காட்டிலும் இது வேறுபட்டுள்ளது உறுதியானது. அரியோசோமா மெரோஸ்டிக்மா மற்றும் அரியோசோமா அல்பிமாகுலேட்டம் ஆகிய விலாங்கு மீன் வகைகளுடன் தொடர்புடையதாக அறியப்பட்டது. அதன்படி, தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த வகை மீனுக்கு அரியோசோமா தூத்துக்குடியன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu