கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் நேரடியாக வீட்டிற்கே விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
சென்னையில் வரும் 24ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் முகாம் நடைபெற உள்ளது. விண்ணப்பங்களை பெற பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வர தேவையில்லை. விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் அனைத்தும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கு நேரடியாக விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் முதல் கட்ட விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இரண்டாம் கட்ட பதிவு ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பெற்ற பொதுமக்கள் அதனை குறிப்பிட்ட நாளில் பூர்த்தி செய்து மீண்டும் பதிவு முகாமிற்கு எடுத்து வரவும் அறிவித்துள்ளனர். உரிமை தொகை விண்ணப்ப பதிவு தொடர்புக்கு கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணையும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.