ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெறும் மகளிர் உலக செஸ் கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், சீனாவின் டான் ஜாங்கியை 1.5 - 0.5 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம், உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். மேலும், Candidates தொடருக்கும் திவ்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்றொரு அரையிறுதியில் ஹம்பி மற்றும் டிங்ஜி லீ இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்ததால், ஹம்பி இறுதிக்கு தகுதியைப் பெற டை-பிரேக்கரில் டிங்ஜியுடன் மோதவுள்ளார்.