ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

October 13, 2022

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வேதுறைக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும். இது 78 நாட்களுக்கு போனஸாகவும், அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆகவும் […]

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வேதுறைக்கு தீபாவளி போனஸ் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் ரூ.1,832 கோடி வழங்கப்படும். இது 78 நாட்களுக்கு போனஸாகவும், அதிகபட்ச வரம்பாக ரூ.17,951 ஆகவும் இருக்கும்.

வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமர் மேம்பாட்டு முயற்சி' (PM-DevINE) எனும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது 2022-23 முதல் 2025-26 வரையிலான அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு 15வது நிதி ஆணையத்தின் திட்டமாகும். மேலும், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ஒருமுறை மானியமாக ரூ. 22,000 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எல்பிஜி எரிவாயு விலை அதிகரித்து வரும் நிலையில் விலைவாசி உயர்வின் சுமை சாமானிய மக்கள் மீது விழக்கூடாது என்பதற்காக இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu