பாராளுமன்ற தேர்தலுக்காக 11 புதிய முகங்களுடன் திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் வடசென்னையில் கலாநிதி வீராச்சாமி, தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னையில் தயாநிதிமாறன், ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர் பாலு, காஞ்சிபுரத்தில் கா. செல்வம், அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், வேலூரில் கதிரானந்த், தூத்துக்குடியில் கனிமொழி, தேனியில் தங்க தமிழ்ச்செல்வன், நீலகிரியில் ஆ. ராசா, கள்ளக்குறிச்சியில் மலையரசன், பெரம்பலூரில் அருண் நேரு, சேலத்தில் செல்வகணபதி, தஞ்சாவூரில் முரசொலி, தென்காசியில் ராணி, பொள்ளாச்சியில் கே.ஈஸ்வர சாமி, கோவையில் கணபதி பி. ராஜ்குமார், ஈரோட்டில் கே.இ பிரகாஷ் ,ஆரணியில் தரணிவேந்திரன், திருவண்ணாமலையில் சி.என் அண்ணாதுரை தர்மபுரியில் அ. மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் 11 புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 21 பேரில் மூன்று பேர் பெண்கள் 19 பேர் பட்டதாரிகள் ஆவர்.