தேர்தலின் போது தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 70 % நிறைவேற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 30% விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி கொண்டிருப்பது தான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்றார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆணையத்தை ஒழுங்குபடுத்தி உரிய விசாரணை நடைபெற்றது.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நிதிநிலைமை சரியான பிறகு மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் 1000 விரைவில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.