மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்கள் நலனை முழுமையாக புறக்கணித்தும், தமிழ்நாடு வளர்ச்சிக்கு சிறிதும் அக்கறை இன்றியும் ஒரு நிதிநிலை அறிக்கை தயார் செய்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.இது குறித்த கேள்விகள் பாராளுமன்றத்தில் தி.மு.க எம்பிக்கள் மூலம் எழுப்பப்படும். மேலும் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டிக்கும் விதமாக பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்பு சின்னம் அணிந்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தெரிவிக்கப்பட்டுள்ளது.