தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர், துணை தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிக்கு தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்க ஜனவரி 19-ம் தேதி கடைசி நாள். தபாலில் அனுப்பப்படும் வாக்குகள் ஜனவரி 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 92,198 மருத்துவர்கள் மட்டும் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பதிவுபெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 1,60,000-க்கு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வெளிப்படை தன்மையுடன் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.