நாய்களின் மூளை செயல்பாடுகள் மனிதர்களைப் போல உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வார்த்தைகளை பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் அறிவு நாய்களுக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் 18 நாய்களின் மூளையில் உள்ள அலைகளை ஆய்வு செய்து இந்த முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஒரு பொருளின் பெயரை கேட்கும் நொடியில், நாயின் மூளையில், அந்த பொருள் தொடர்பான ஞாபகங்கள் தூண்டப்படுவதாக உறுதியாகி உள்ளது. இதனாலேயே, வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் இடும் கட்டளைகளை நாய்கள் துல்லியமாக செயல்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே போன்ற மூளை செயல்பாடுகள் நாய்களைத் தவிர இதர பாலூட்டிகளிடம் உள்ளதா என்பது குறித்து ஆய்வை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.