நவம்பர் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3% உயர்ந்துள்ளதாக பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ICRA தெரிவித்துள்ளது. எனினும், இது கொரோனாவுக்கு முந்தைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் 7% குறைவு எனவும் தெரிவித்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில், விமானப் பயணிகளின் எண்ணிக்கை 13% உயர்ந்துள்ளதாக ICRA தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதே வேளையில், சர்வதேச விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் திடமாக உயர்ந்து, 4.9 மில்லியனாக நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளது. இதுவும் மாதாந்திர அடிப்படையில் 3% உயர்வாகும். சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை, நவம்பர் மாதத்தில் 28.3 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 3 மாதங்களுக்குள், மொத்த விமான பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று ICRA கணித்துள்ளது.