இங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் டொமினிக் ராப், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சக விவகாரங்களில் தலையிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது விசாரணை தொடரப்பட்டது. விசாரணைக் குழுவின் தலைவரான மூத்த வழக்கறிஞர் ஆல்மண்ட் டோலி, பிரதமரிடம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “டொமினிக் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. அறிக்கையை நான் இன்னும் கவனமாக பரிசீலிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை எப்போது பொதுவெளிக்கு கொண்டுவரப்படும் என்பது குறித்து அவர் அறிவிக்கவில்லை. டொமினிக் ராப், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வந்தார் என்பதும், விசாரணைக் குழுவின் முடிவுகளை மதித்து, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்வதாக கூறியிருந்ததும், குறிப்பிடத்தக்கது. மேலும், ரிஷி சுனக் தலைமையிலான ஆட்சியில், அமைச்சரவையில் இருந்து வெளியேறும் மூன்றாவது முக்கிய நபராக இவர் உள்ளார்.