மசாக்ரே ஆறு பிரச்சினையால் ஹைதி உடனான எல்லைகளை டொமினிக் குடியரசு மூடியது.
தென் அமெரிக்க நாடான டொமினிக் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான ஹைதி இடையே மசாக்ரே ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. அங்குள்ள பகுதியில் சிலர் கால்வாயை தாண்டியதால் இந்த பிரச்சனை தற்போது தீவிரமாகியுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் காலவரையின்றி எல்லையை மூடுவதாக டொமினிக் குடியரசு நாட்டின் அதிபர் லூயிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று வான், கடல் மற்றும் தரை என அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் இந்த இரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.