ரஷியப் படைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லிதுவேனியாவில் அடுத்த மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கிறது. நேட்டோ அமைப்பில் உள்ள தலைவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று நேட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ அமைப்பில் உள்ள 8 நாட்டு தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ரஷியாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்டதால் அதன் ராணுவத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
நேட்டோ மாநாடு நடைபெறும்போது ரஷியா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் படைகளை சமாளிக்கும் வகையில் எங்களுடைய தயார் நிலை அதிகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். ரஷிய அதிபர் புதின் தனது படையை விரிவுப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் கிழக்குப் பகுதியில் தங்களது படைகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை நேட்டோ தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.