ரயில் நிலையங்களில் ரிலே அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை

நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். இந்நிலையில், […]

நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசாவில் கடந்த 2-ம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்தது நாட்டையே உலுக்கியது. விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். இந்நிலையில், ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையில் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu