அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில், ரஷியாவின் பல நகரங்களுக்கான விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் நிறுத்தி வைத்துள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ரஷியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணை தாக்குதலால் விமானம் தாக்கப்பட்டு விழுந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பாக்கூவில் இருந்து 67 பயணிகளுடன் கிரோஸ்னி நோக்கி புறப்பட்ட எம்ப்ரயா்-190 ஏஆா் விமானம், அக்தெள நகரத்திற்கு அருகே தரையிறங்குவதற்கு முன் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர். முதலில் பறவைகள் மோதியதாக கருதப்பட்டாலும், ரஷியாவின் வான்பாதுகாப்பு தாக்குதலால் விழுந்தது என சந்தேகிக்கப்படுகிறது.