ஏமன் அருகே கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் மாயமாகியுள்ளனர்.அந்த படகு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 75 பேர் பயணம் செய்தனர். அப்போது ஏமன் கடல் அருகே வேகமாக காற்று வீசியதால் அந்த படகு நிலைகுலைந்து. அப்போது அவர்கள் கடலுக்குள் விழுந்தனர். இதுவரை 26 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எஞ்சிய 49 பேரும் மாயமாகியுள்ளதாக ஏமன் கடலோர கடற்படையில் காவல் படையினர் கூறியுள்ளனர்.