ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தீவில் 77 பைலட் திமிங்கலங்கள் நேற்று முன்பு இறந்து கரை ஒதுங்கின.
கடந்த வியாழன் என்று ஸ்காட்லாந்தின் சன்டே தீவில் 77 திமிங்கலங்கள் கடற்கரையில் இறந்த நிலையில் பிரிட்டிஷ் டைவர்ஸ் மறைன் லைஃப் என்ற அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 65 முன்பே இறந்துவிட்டன. மீதமுள்ள 12 திமிங்கலங்கள் உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. திமிங்கலங்கள் பல்வேறு காரணங்கள் காரணமாக கரை ஒதுங்குகின்றன. அலைகளால் சிக்கிக் கொண்டால் அல்லது தங்கள் வழியை மறந்து விட்டால் இவ்வாறு கரை ஒதுங்கும். இந்த நிகழ்வுக்கு பின்னால் எந்த ஒரு உறுதியான காரணமும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஒரு வருடத்திற்கு முன்பே இதே போன்ற சம்பவம் மற்றொரு தீவான லூயிஸில் நடைபெற்றது. அப்பொழுது 55 திமிங்கலங்கள் கடற்கரையில் இறந்த கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.