அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நாசவின் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று நீண்ட காலம் ஆய்வு செய்யும் 'ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-6' என்ற பயணத்திட்டத்தில் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி, அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீரர்கள் கமாண்டர் ஸ்டீபன் போவன், பைலட் வாரன் ஹோபர்க் மற்றும் ரஷியாவின் ராஸ்காஸ்மோஸ் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெடியேவ் ஆகியோர் பயணம் செய்கின்றனர். இதற்கு முதற் கட்டமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலமான டிராகன் கேப்சூலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 39ஏ என்ற ராக்கெட் ஏவுதளத்தில் பால்கன் 9 ராக்கெட்டின் நுனி பகுதியில் பொருத்தப்பட்டு இருந்தது. பிறகு எரிபொருள் நிரப்பப்பட்டு ராக்கெட் அமீரக நேரப்படி காலை 9.41 மணிக்கு என்ஜின் கவுன்ட் டவுன் மூலம் இயக்கப்பட்டது.