வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீர் இன்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. கூடுதல் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடி ஆகும்.இங்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு அதன் மூலம் காவேரி நீர் வந்திருந்த போது முழு கொள்ளளவை எட்டியது. மேலும் இதன் மூலம் விவசாய விளைநிலங்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது. தினந்தோறும் 76 கன அடி நீர் சென்னைக்கு குடிநீராக அனுப்பி வைக்கபட்டதும் தற்போது இது 2 மில்லியன் கன அடி நீராக குறைந்துள்ளது. இதனை அடுத்து நேற்று சென்னைக்கு அனுப்பப்பட்ட நீர் 3 அடியாக குறைக்கப்பட்டது. இன்று முழுவதுமாக குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படு் வதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வடலூர் வாலாஜா ஏரியிலிருந்து நீர் எடுக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.