மத்திய அரசு சாலை விபத்தில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அதிகரித்து புதிய சட்டத்தை நிறைவேற்றியது.
மத்திய அரசு சாலை விபத்துகளை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் முன்னெச்சரிக்கையாக வாகனங்களில் முழுமையாக எரிபொருளை நிரப்ப மக்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு படையெடுத்து உள்ளனர். இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்திற்கு சென்னையிலிருந்து பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்படுவதால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளனர்.