உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் கிடங்கு தீ பற்றி எரிந்தது.
கடந்த சில வாரங்களாக ரஷ்யாவுக்கு இடையே போர் மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. ரஷ்யா உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதையடுத்து உக்ரைனும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள ரோஸ்ஸ்டவ் என்னும் மாகாணத்தில் உள்ள பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் கிடங்கு தீ பற்றி எரிந்தது. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் இந்த தீ அணைக்கப்பட்டது. இந்த தீயானது சுமார் 2,100 சதுர அடி அளவிற்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்தால் உயிரிழப்பு எதுவும் இல்லை. அதோடு மேலும் இரண்டு உக்ரைன் டிரோன்களை ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துள்ளது.
அதேபோல் ரஷ்யாவின் ஐந்து டிரோன்களில் நான்கு டிரோன்களை உக்ரைன் இடமறித்து அழித்துள்ளது. இதில் ஒரு விமானம் பெலாரஸ் திசையில் உக்ரைன் வான்வெளியைவிட்டு வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.