ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் - உக்ரைன் மீது குற்றச்சாட்டு

December 7, 2022

ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியா குற்றம் சாட்டியது. ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள 2 விமானப்படை தளங்களில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஷிய வீரர்கள் 3 பேர் பலியாகினர். இந்த 2 விமானப்படை தளங்களிலும் உக்ரைன் மீது குண்டுகள் வீசுவதற்காக போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் […]

ரஷிய விமான நிலையத்தில் 'டிரோன்' தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியா குற்றம் சாட்டியது.

ரஷியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் சரடோவ் மற்றும் ரியாசான் பிராந்தியங்களில் உள்ள 2 விமானப்படை தளங்களில் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ரஷிய வீரர்கள் 3 பேர் பலியாகினர். இந்த 2 விமானப்படை தளங்களிலும் உக்ரைன் மீது குண்டுகள் வீசுவதற்காக போர் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என ரஷியா குற்றம் சாட்டியது. மேலும் இதற்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷியா தாக்குதல்களை அதிகரித்தது.

இந்த நிலையில் ரஷியாவின் தெற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் நேற்று காலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதாகவும், அதில் விமான நிலையத்தில் பெரிய அளவில் தீப்பற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலையும் உக்ரைனே நடத்தியிருக்கும் என ரஷியா குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து உக்ரைன் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu