ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ட்ரோன் பறக்க இன்று முதல் 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதையடுத்து சென்னையில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளார்.