நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள டேடன் நகரில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முதல், விமானப்படைத்தளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துவருகின்றன. அதே நேரத்தில், நியூயார்க், நியூஜெர்சி, யுடா போன்ற மாகாணங்களிலும் விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைத்தளங்கள் அருகே இதேவிதமாக டிரோன்கள் பறந்துவருகின்றன. இந்த மர்ம டிரோன் சம்பவங்களில் வெளிநாட்டு நபர்களின் […]

நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள டேடன் நகரில் அமைந்துள்ள விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த சனிக்கிழமை முதல், விமானப்படைத்தளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துவருகின்றன. அதே நேரத்தில், நியூயார்க், நியூஜெர்சி, யுடா போன்ற மாகாணங்களிலும் விமான நிலையங்கள் மற்றும் விமானப்படைத்தளங்கள் அருகே இதேவிதமாக டிரோன்கள் பறந்துவருகின்றன. இந்த மர்ம டிரோன் சம்பவங்களில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால், நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும் நபர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu