தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நெல்லை வருகிறார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை மறுநாள் முன்னால் காங்கிரஸ் தலைவர் நெல்லை வரவுள்ளார். மேலும் அங்கு பிரச்சாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட ஆறு தென் மாவட்டங்களை சேர்ந்த இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்ட மேடையில் பேச உள்ளார். இதனால் நெல்லை மாவட்டத்தில் நாளை காலை 6:00 மணி முதல் 13-ஆம் தேதி காலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.