மும்பையில் 1 மாத காலம் டிரோன்கள் பறக்க தடை - காவல்துறை உத்தரவு

November 10, 2022

மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் இந்த தடை உத்தரவு இன்று மும்பை காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13 முதல் டிசம்பர் 12 வரை அமலில் இருக்கும். இது குறித்து மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில், விவிஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகளும், தேச விரோத சக்திகளும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 நாட்களுக்கு […]

மும்பையில் 30 நாட்களுக்கு டிரோன் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் இந்த தடை உத்தரவு இன்று மும்பை காவல்துறையால் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நவம்பர் 13 முதல் டிசம்பர் 12 வரை அமலில் இருக்கும். இது குறித்து மும்பை காவல்துறை பிறப்பித்த உத்தரவில், விவிஐபிகளை குறிவைத்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கவும் பயங்கரவாதிகளும், தேச விரோத சக்திகளும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தக்கூடும்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக 30 நாட்களுக்கு பிரஹன்மும்பை போலீஸ் கமிஷனரேட் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள பகுதிகளில், டிரோன்கள் மற்றும் ரிமோட்-கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய அல்லது இலகுரக விமானம், பலூன்கள் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu