மும்பையில் ரூபாய் 18.05 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

ரூபாய் 18.05 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் மும்பையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் கார்கர் ரயில் நிலையம் அருகில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது சந்தேகப்படும்படி இருந்த இரு நபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் சுமார் ரூபாய் 4.40 லட்சம் மதிப்புள்ள 44 கிராம் மெத்தகுலோன் போதை பொருளை கடத்தல் செய்து வந்ததும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் […]

ரூபாய் 18.05 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் மும்பையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கார்கர் ரயில் நிலையம் அருகில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபொழுது சந்தேகப்படும்படி இருந்த இரு நபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் சுமார் ரூபாய் 4.40 லட்சம் மதிப்புள்ள 44 கிராம் மெத்தகுலோன் போதை பொருளை கடத்தல் செய்து வந்ததும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று ஏபிஎம்சி காவல் நிலைய எல்லையில் ஏஎன்சி நடத்திய சோதனையில் ரூ.13.65 லட்சம் மதிப்புள்ள 2.60 கிராம் எடையுள்ள 91 எல்எஸ்டி கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மூவரின் மீதும் போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த இரு இடங்களிலும் கைது செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு ரூபாய் 18.5 லட்சம் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu