கன மழை காரணமாக தேனி சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியது

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை கனமழையின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முழு கொள்ளளவை எட்டியது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் சோத்து பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு கடந்த 10 நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து படிப்படியாக உயரத் தொடங்கிய அணையின் நீர்மட்டம் […]

தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை கனமழையின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முழு கொள்ளளவை எட்டியது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் சோத்து பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இந்நிலையில் அங்கு கடந்த 10 நாட்களாக பெய்த கோடை மழையின் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து படிப்படியாக உயரத் தொடங்கிய அணையின் நீர்மட்டம் நேற்று இரவு முழு கொள்ளளவை அடைந்தது. இதனை தொடர்ந்து சோத்துப் பாறை அணையின் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியகுளம், வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரை பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவும், கடக்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu