ஏற்றுமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடக்க உள்ளது.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள், சட்ட திட்டங்கள் குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 2 வரை நடக்க உள்ளது. தினமும் பகல் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை கருத்தரங்கம் நடக்கும்.
இந்த பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், வங்கி நடைமுறைகள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்புவோர், தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை, ஏற்றுமதி செய்ய விரும்புவோர், 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். மேலும் விபரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.