சென்னை சுற்றுவட்டாரத்தில் அதிகாலையில் பனிப்பொழிவு

November 18, 2022

சென்னையில் அதிகாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, பாரிமுனை, காமராஜர் சாலை, அடையாறு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன […]

சென்னையில் அதிகாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாகவே சென்னையில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, பாரிமுனை, காமராஜர் சாலை, அடையாறு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.

சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர். காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வோர், வேலைகளுக்கு செல்வோர், பனி மற்றும் குளிரால் சிரமத்திற்கு ஆளாகினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu