2026ம் ஆண்டுக்கான திட்டம், 2025 அக்டோபரிலேயே செயல்பாடு பெறுகிறது; 8 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என அரசு அறிவிப்பு.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய நலத் திட்டமாக, ஈட்டிய விடுப்பை (Earned Leave) சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை, 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது pôதுவாக 2026 ஏப்ரலில் இருந்து அமலுக்கு வரவிருந்தது. 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.