பூமியின் மையப்பகுதி கடந்த 2009ம் ஆண்டு சுற்றுவதை நிறுத்தியது. இந்நிலையில், தற்போது, பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு எதிர் திசையில் சுற்றத் தொடங்கியுள்ளதாக பீஜிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக, தினசரி நாளின் நேரம் சிறிதளவு மாற்றம் அடையலாம் என்று கருதப்படுகிறது. மேலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இதனால் என்ன விளைவுகள் நேரும் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாகவே, எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்களுக்கு பூமியின் மையப் பகுதி நேரடி தொடர்பில் இருப்பதாக கருதப்படுகிறது. அத்துடன், இந்த மையப்பகுதி 35 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, 1970 ஆம் ஆண்டு மாறியதாக கருதப்படும் மையப்பகுதி, வரும் 2040 ஆம் ஆண்டு மீண்டும் மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.