சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றி வரும் பூமி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சூரியனுக்கு மிக நெருக்கமாக வரும். குறைந்த விட்டமுடைய பாதையில் பூமி பயணிக்கும் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மிகவும் குறுகியதாக இருக்கும். இவ்வாறு, மிகவும் குறுகிய தூரம் நிகழும் நாள் பெரிஹீலியன் தினம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டில், ஜனவரி 3ம் தேதி, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் மிகவும் குறைவாக உள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பெரிஹீலியன் தினம் நிகழ்ந்துள்ளது அறிவியலாளர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி உள்ளது. இன்றைய தினம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் 3 மில்லியன் மைல் அளவில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.