சூரிய குடும்பத்துக்கு வெளியிலிருந்து வந்த சக்தி வாய்ந்த காமா கதிர்வீச்சுகளால் பூமி தாக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 9 2022 ஆம் தேதி, மிகப்பெரிய காமா வெடிப்பு பதிவானது. GR 221009A என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காமா வெடிப்பின் பிறப்பிடம் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. பூமியிலிருந்து 2 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கேலக்ஸியில் இருந்து இது வெளிப்பட்டதாகவும், இதுவரை பூமியை தாக்கிய காமா கதிர்வீச்சுகளில் இது சக்திவாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த கதிர்வீச்சின் போது, இந்தியாவில் உள்ள இடிதாங்கிகள் அதனை உணர்ந்ததும், பூமியின் வளிமண்டல மேலடுக்கில் உள்ள அயனி மண்டலம் பாதிக்கப்பட்டதும், உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் இதனை தெரிவித்துள்ளது.