துருக்கியில் இன்று அதிகாலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.3 ஆக ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது.
துருக்கி நாட்டின் தென்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது 5.43 ஆக ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அங்குள்ள சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு முன்னர் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது