அந்தமானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அந்தமான் - நிககோபார் போர்ட் பிளேயரில் 126 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடு மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. பொதுமக்கள் அனைவரும் பீதி அடைந்தனர். மேலும் இதனால் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் உயிரிழப்போ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.