ஜம்மு காஷ்மீரில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நேற்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜம்மு, லடாக் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.














