மத்தியப்பிரதேசத்தில் நேற்று நிலநடுக்கம்

November 2, 2022

மத்தியப் பிரதேசத்தில் நேற்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திந்தோரி, மண்டலா, அனுப்பூர், பாலாகாட் மற்றும் உமாரியா மாவட்டங்களில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 8.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 புள்ளிகளாக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திந்தோரியை மையமாக கொண்டு, 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட சேத […]

மத்தியப் பிரதேசத்தில் நேற்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபால்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள திந்தோரி, மண்டலா, அனுப்பூர், பாலாகாட் மற்றும் உமாரியா மாவட்டங்களில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. காலை 8.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.3 புள்ளிகளாக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திந்தோரியை மையமாக கொண்டு, 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி உள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதேபோல், மகாராஷ்டிராவிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பால்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட தஹானு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.52க்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோளில் 3 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. தஹானுவில் இருந்து 13 கிமீ தொலைவில் இதன் மையம் இருந்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu