மணிப்பூரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 25 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதன் நீளம்: 93.66, ஆழம்: 25 கிமீ இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.