மொராக்கோ நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 296 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு ஆப்பிரிக்க நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சேதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.