பெருவின் சாண்டா ஆனா நகரில் இருந்து 14 கி.மீ. வடகிழக்கில் நேற்று இரவு 7.39 மணிக்கு 5.7 ரிக்டர் அளவுகோலினால் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 79.4 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், சேதங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.