திபெத்தில் ரிக்டரில் 4.5 ஆக நிலநடுக்கம் பதிவானது.
திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 7ம் தேதி, ஷிகாட்சே நகரில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி 3.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில், 29.10 டிகிரி வடக்கு மற்றும் 87.66 டிகிரி கிழக்கு இடங்களில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.