மியான்மரில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று மதியம் 1.33 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில், 24.77 டிகிரி வடக்கு கோணத்திலும், 96.30 டிகிரி கிழக்கு நீளவட்டத்திலும் ஏற்பட்டதாக முதலில் அறியப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் வெளியிடப்படவில்லை. மேலும், கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மியான்மரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.