பாகிஸ்தானில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிட்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் நள்ளிரவு வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இது ரிட்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. பூமியில் இருந்து 190 கிலோமீட்டர் ஆழத்தில் இது ஏற்பட்டுள்ளது என்று தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதுவரை யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. இது குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.