நேபாளத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.59 மணியளவில் ஏற்பட்டது. மேலும் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் ஏற்படவில்லை. அதேபோல், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி நேபாளத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.