ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ரிக்டர் அளவு 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் மட்டும் 4.4 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் வரை ஏற்பட்டுள்ளது. உயிர் சேதம் மற்றும் பிற சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே "ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக மிசோரம் என்கோபாவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.