ஜப்பான் மற்றும் கலிபோர்னியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு சிபா மாகாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆகப் பதிவாகியுள்ளது. அதிகாலை 4.16 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இதேபோல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்குப் பகுதியின் தென்மேற்கே 4 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. கடல்மட்டத்தில் இருந்து 1.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.